Tuesday, February 16, 2021

அஞ்சலி.. அஞ்சலி... Homage to Paadum Nila SPB


 


அஞ்சலி.. அஞ்சலி... 



தேன் தோய்ந்த

உந்தன் குரல்,

கேட்காமலே வந்து

வலிக்காமலே வருடும்

தென்றலை போன்றது


அந்த

காந்த குரல்,

இறுகிய இரும்பு

இருதயங்களையும்

இறுதி வரை

உருக்கி ஈர்த்தது


உன் பாடல்களை

காலையில்

கடனாய் கறந்துக்கொண்டோம்,

பகலில்

பங்கு போட்டுக்கொண்டோம்,

இரவில்

இரவல் வாங்கிக்கொண்டோம்


இப்படியாக

தெரிந்தவனுக்கும்

அறியாதவனுக்கும்

பாகுபாடின்றி

வெகுவாக தந்தற்கு

வெகுமதி என்ன?

அள்ளி தந்த மேகத்திற்கே

கொள்ளி வைத்த

கொடுமை மட்டுமே


வழக்கமான

பழக்கம்

நீ பாடுவாய்

நாங்கள்

மெய்மறந்து வாயடைத்திருப்போம்

இன்றோ

நாங்கள் கதறுகிறோம்

இமைக்காமல் நீ ஏன்

அமைதியானாய்?


அனைத்திலும்

அநீதி

பாடிய உன்னை

பாடையில் பார்த்து

வாடியோர்க்கு நீங்கள்

பாடிய பாடல்களே

ஆறுதல் சொன்னது


நீவிர்

எல்லா தெய்வங்களுக்கும்

நல்லா பாடியிருக்க கூடாது

சுயநலமிக்க அந்த

கயவர்கள்

துரிதமாக தங்களை

திருடிக் கொண்டார்கள்


இருண்ட சோகம்

புரண்ட துக்கம்

திரண்ட இரங்கல்

திக்கெட்டிலும் எதனால்?

குரலால் மென்மையானவர்

குணத்தால் மேன்மையானவர்

என்பதில் ulladhu

என் பதில்

No comments:

Post a Comment