Friday, September 7, 2018

கவலை இல்லை; Translated version in English: Worries be gone

முத்தத்தில்,
நதி நகரும்
சத்தத்தில்,
கவலை இல்லை

தானத்தில்,
எல்லை இல்லா
வானத்தில்,
கவலை இல்லை

நிழலில்,
நாதம் தரும்
குழலில்,
கவலை இல்லை

குமுழியில்,
கன்னத்தில் விழும்
குழியில்,
கவலை இல்லை

தாலாட்டலில்,
நயமான நாயின்
வாலாட்டலில்,
கவலை இல்லை

தென்றலில்,
பூவாசம் கடந்து
சென்றதில்,
கவலை இல்லை

தழுவலில்,
கையில் நுங்கின்
நழுவலில்,
கவலை இல்லை

அயர்ந்ததில்,
பிள்ளைகள் நம்மைவிட
உயர்ந்ததில்,
கவலை இல்லை

பனியில்,
தானாக பழுக்கும்
கனியில்,
கவலை இல்லை

வருணத்தில்,
ஒழுகலை உறிஞ்சும்
தருணத்தில்,
கவலை இல்லை

அலையில்,
மழையினால் அசையும் 
இலையில்,
கவலை இல்லை

இத்தனை இருந்தும்
வாழ்க்கையில்
அணு அளவும்
கவலை இல்லையென்ற
நிலை வரும் 
தருணம்
மரணம்,
அதுவரை எல்லா
நிமிடமும்
கவலை எனும்
வலையில் விழாமலிருக்க
கவனம் செலுத்துவோம்!

--------------------------------------------------------------------------------------------------------------------------
English translation of this poem by Kirubakaran Pakirisamy:


Worries be gone 
------------------------

In the sweetness of the kiss lingering
And in the rustle of the stream meandering
Worries are gone

Doing that charity that was appreciated
And in the sky so vast and expanded
Worries are gone

In the hot sun the shade is welcoming
And he gentle music of the flute is soothing
Worries are gone

That floating bubble is so fascinating
And the dimple in the cheeks charming
Worries are gone

The warming lullaby of the new mother
And the love of the tail-wagging pet is dearer
Worries are gone

The breeze so soft and vibrant
And the smell of the garden so fragrant
Worries are gone

The embrace so gentle and warm
And juices of the apple on my arm
Worries are gone

Unwinding and enjoying the retirement
And the progenies topping parent’s accomplishment
Worries are gone

The whiteness of the snow so cute
And in the joy of tasting a ripe fruit
Worries are gone

The majesty of the steady rain 
And dew drop on the tongue like champagne
Worries are gone

The rollicking wave on the shore
And the swaying leaves in the ran to the fore
Worries are gone

So many joys and  pleasures to our health
One thing relieves all worries fully is - death
Till that day arrives nothing to fear
So many pleasures to enjoy still,  my dear


© Ravishankar Palanivelu, Aug 31, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments 

Saturday, June 16, 2018

ஊக்கம்

விடா முயற்சியில்
கைவிடாத ஊன்றுகோல்,
மீண்டும் முயற்சிக்க
தூண்டும் வேண்டுகோள் 

அயரும் வேளையில்
உயரும் நோக்கத்தை
உரக்கச் சொல்லி
விழிக்க வைக்கும்
வழிகாட்டி அலாரம் 
ஊக்கம்

அடை மழையில்
குடைப் போல்,
கலங்கிய கடலில்
களங்கரைவிளக்கம் போல்,
நலிந்த வேளையில்
நம்பிக்கை தருவது
ஊக்கம்

கரை
வரை மட்டுமே
வந்து மடிந்த
அலையை
எல்லை மீறி
எகிற வைக்கும்
பின்னணி புயல்
ஊக்கம்

அளவிளா ஆனந்தத்தை
துளி கூட
சொல்ல முடியாமல்
அல்லோலப்பட்டு
வார்த்தைகள்
வற்றிப் போனாலும்,
அவற்றை
உடலைக் கொண்டு
உரைக்க வைக்கும்
சிலிர்ப்பு போன்றது
ஊக்கம் 

அமாவாசை
இருட்டில் நிலவொளி 
இருக்காது என்றாலும்
நட்சத்திர சிமிட்டல்களை
நாசுக்காய் சுட்டிகாட்டி
நம்பிக்கை தருவது
ஊக்கம்

போட்டியின் முடிவில்
கை தட்டுவது
பாராட்டு,
போட்டியின் போது
கை தட்டுவது
ஊக்கம்

தோல்விக்குப் பின்
சாய்ந்துக் கொள்வதற்கு
தோள் கொடுப்பது
ஆறுதல்,
வெல்வது இன்னும்
சாத்தியம் என்று
சொல்லி கொடுப்பது 
ஊக்கம் 

சக்கைப்
போடு போடுகிறாய்
என்று
எத்தளிப்பது அல்ல
ஊக்கம்,
சக்கையாகி போயினும்
மீதம் உள்ளதை
பதமாய் பிழிவது
ஊக்கம்

நடந்து விடுமென்ற
நப்பாசையில் வாழ்த்து
நல்குவது
அவர்கள் மேலுள்ள
அன்பை காட்டுகிறது,
முடியாததை, கடுமையானதை
முனைந்து முடிக்க
முயற்சிக்க ஊக்குவிப்பது 
அவர்கள்
திறமையின் மேலுள்ள 
நம்பிக்கையை காட்டுகிறது

ஊக்கத்தின்
தாக்கம்
சாமான்யன்
சாம்ராஜ்ஜியம் எய்ததிலும்,
அறியாதவர்
அரிதாய் சாதனை 
பெரியதாய் புரிந்ததிலும்
நிறைந்துள்ளது;
ஆயினும் இவை 
புவியை வென்ற 
புல்லிலும்,
வெறுங்காற்றில்
வலை பிண்ணும்
கலை அறிந்த
சிலந்தியிடமும்,
மொத்த ஜீவராசிகளின்
சுயஊக்கத்தின் முன்
சுமார் தான்.

© Ravishankar Palanivelu, June 16, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Friday, April 20, 2018

சிதைக்கப்பட்ட சிறுமி

வண்டு கூட
மொட்டுக்களை எப்பவுமே
மொய்க்காதே,
பூசைக்கு கூட
பூத்த பூக்களையே
கொய்வார்களே,
சிறுமியை சிதைக்கும்
பொறுக்கிகள் ஏன்
வாய்த்தார்களோ?

வேலியே இந்த 
வேலையை செய்தது
கேவலமே,
வளர்ந்தவர்களே குழந்தையை
வதைத்து கொன்றது 
வஞ்சகமே

பிஞ்சு உள்ளத்தை
பிச்சிப் போட்ட
பரதேசிகளுக்கு போய்
அரசியல்வாதிகள் சிலர்
வக்காலத்து வாங்குவது
எக்காலத்திலும் என்னால் 
ஏற்க இயலவில்லை,
தன்மதகாரர் என்பதற்காக
தனமானம் இல்லாமல்
சப்பை கட்டுவோரை
சபிக்கவே தோன்றுகிறது

மதத்திற்கா இத்தனை
மதமை பதர்களே?
சதிக்கு ஏதடா
விதிவிலக்கு?

மாடு மேய்த்தவளை
மேய்ந்து மாய்த்த
கயவர்களே, உங்களை
கைது பண்ணலாகாது,
கைமா தான்
கையோடு செய்திடனும்

குழந்தையும் தெய்வமும்
ஒன்று என்ற
இந்து மதத்தை
நிந்தித்த நயவஞ்ச்சகர்களே
உங்கள் கொடுமைக்கு 
இனிமேல் தான்
தண்டனையை நாங்கள்
கண்டுபிடிக்க வேண்டும் 

அவள் சாகும்
அவலம் நேரும்
முன்னரே நீங்கள் 
மூவரும் இறந்தீர்கள்,
இதயமே இல்லாததால்

நேரிட்டு ஒருவேளை 
நீங்கள் வந்திருந்தால்
அண்ணா, மாமா
அய்யா என்றள்ளவா
அழைத்திருப்பாள்?
அவளைப் போய்
சாவடித்த பாவிகளே

அவளின் பயத்திற்கு
வலிக்கு கூட
வலித்திற்கும்
கண்ணீர் கூட
ஆவியாயிருக்கும்

பகையால் அவளை
பகடை காயாக்கினீர்களே
வேற்றுமை உணர்வால்
வேங்கை ஆனீர்களே
கொன்னதை தவிர 
என்னத்தை கண்டீர்கள்?

அவளை காக்காத
அரசாங்கம் இனியாவது
சேதி அனுப்ப 
சேதம் செய்தவர்களை
கைது செய்து
எல்லா மதவாதிகளையும்
எச்சரிக்க வேண்டும் 
அந்த சிறுமிக்கு
இருக்கும் போது
கிடைக்காத நியாயம்
இறந்த பிறகாவது
பிறக்க வேண்டும்.


I wrote this Tamil poem after being disgusted about the rape and killing of an 8-year-old young Muslim nomadic girl in the Jammu/Kashmir region of India. How can one tolerate such an atrocity? I hope no one is trying to justify this in any way. No eye for an eye please and no bias due to religion or party. There should be no debate, simply condemnation. We should never tolerate such actions in a civilized society. Certain redlines should not be crossed. I am ashamed.

© Ravishankar Palanivelu, April 20, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section

Tuesday, April 17, 2018

உன்னத வாழ்க்கை

கண்ணில்  தெரிவது
அம்பா?
அன்பா?

நெஞ்சில் வருவது
நெருப்பா?
நெருக்கமா?

யாசித்தவர்க்கு தருவது
உதாசீனமா?
உதவியா?

அடுத்தவரின் நல்லதை
சுருட்டினீர்களா?
சுட்டிக்காட்டினீர்களா?

நல்ல யோசனைகளை
பதுக்கினாயா?
பகிர்ந்தாயா?

கசிந்த கண்ணீரை
தொடுத்தாயா?
துடைத்தாயா?

விடா முயற்சிகள்
கருகியதா?
கருவானதா?

நன்றி சொல்ல
மறந்தாயா?
முனைந்தாயா?

சரித்திரத்தின் பாடங்களை
அலட்டசியப்படுத்தினாயா?
அசைப்போட்டாயா?

இயற்கையின் அழகு
ஒன்றுமில்லாததா?
ஒப்பில்லாததா?

சுற்றுபுறச் சூழலை
காயப்படுத்தினாயா?
காப்பாற்றினாயா?

அடுக்காத அநீதிகளை
இழைத்தாயா?
இழித்தாயா?

வேற்றாரிடம் கொண்டது
அந்நியமா?
அன்யோன்யமா?

நம்மையும் மிஞ்சியவர்கள்
அற்பமா?
அற்புதமா?

வேரறுக்கும் வேற்றுமையை
கொண்டாயா?
கொன்றாயா?

பிறரின் பாராட்டுக்களை
குறைத்தாயா?
குவித்தாயா?

தீங்கு செய்தவர்களை
மன்றாடினாயா?
மன்னித்தாயா?

புறம் பேசுவதை
நிகழ்த்தினாயா?
நிறுத்தினாயா?

உன்னத வாழ்க்கை
சிக்கலா?
சுலபமா?

மேலோங்க மேலுள்ள
இரண்டாவதிலேயே
முதலீடுயிடு!


© Ravishankar Palanivelu, April 17, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Tuesday, April 10, 2018

பனிமழை; Translated version in English: The Perfect rain


மல்லிகை மொட்டுக்கள்
வெள்ளை மணலான
கொள்ளை அழகை
சொல்லி மாளாது,
புள்ளிகளே தானாய்
துள்ளி இறங்கி
கோலமான அதிசயத்தை
விளக்க இயலாது

தள்ளி நிற்பதை
தள்ளி போடு,
நெருப்பா இது 
அருகில் அமர்ந்திடு,
வெந்தா விடும் 
வந்து எடு

பனி மழையின்
தனித்துவம் என்ன?
உறைந்து போயினும்
குறைந்து போகவில்லை
மாறுபாடு இல்லையினும்
ஈடுபாடு குறையவில்லை

பனி துளியை
பண்ணிய உளியை
பார்க்க இயலாவிட்டாலும்
பணிந்து விட்டேன்,
அமைதிக்கு அத்தாட்சியாய்
வெள்ளைப் பூக்கள்
குவிந்ததற்கு தலை
குனிந்து விட்டேன்

மேலே இடமின்றி 
மேகங்கள் எல்லாம்
தரையில் இன்று
கரை ஏறியது

இலைகளை எல்லாம்
தொலைத்து விட்டு
மரங்கள் தானே
விதவை ஆயின,
பூமி ஏன்
பூண்டது வெள்ளாடை?

வரப் போகிறது
இளவேனில் காலம்
இல்லை எனவில்லை
இப்பொழுதே அதை
வரவேற்க யார்
வெள்ளையடித்து வைத்தது?

வெள்ளை மகரந்தங்களை
அள்ளி வந்து
பூமிப் பூவில்
மகரந்தச் சேர்க்கை
மகத்துவத்தை செய்த
வண்டுக்களை கொஞ்சம்
கண்டுப் பிடியுங்கள்,
தேனீக்கள் தென்பட்டால்
தேடுகிறேனென்று தெரிவியுங்கள் 

குழந்தையின் உள்ளங்கை,
உழவரின் உழைப்பு,
தன்னலமற்ற தாய்மை,
கரம் கறக்காத
கன்று மட்டும்
பசிக்கு பருகிய 
பசும் பால்,
இத்தனை இருந்தும்
உன் தூய்மைக்கு
உண்மையிலேயே உள்ளதா 
உகந்த உவமை?

மழையிலும் ஒரு
பிழை உண்டு;
நனைப்பதால் தெறிப்பதால் 
அனைவரும் ஒதுங்குகிறோம்
ஆனால் நீயோ
மெதுவான மழையாக
ஏதுவாய் இறங்கியதால்
இதமாக இருக்கிறாய்,
குளிருக்காக பூமியின்
குடையான மரங்களில்
வலியவே வந்தாலும்
வலிக்காமல்  வடித்ததால்
பதமாக தெரிகிறாய்.

English Translation by Kirubakaran Pakkirisamy

The Perfect Rain
----------------------

White cherry blossoms on ground
Many a majestic little white mound
White dots like in a puzzle
Turns itself into a painting with no tussle

No need to maintain that distance
Looks like white hot fire in an instance
But it is not, grab a seat and touch it
It is soft and cool, come down and sit

Even when frozen to death
Comes back to life in stealth
Thats the beauty of snow
It puts on a great white show

Who sculpted the snow flake grand
In respect before the maker I stand
White flowers herald peace
I bow my head before the soft seas

Gliding clouds seem to have run out of space in the sky
They have touched down on land without being shy

Why does the Earth don the doctors white suit over
May be to fix the trees that lost their leaves in the Fall fever

Spring is just  around the corner quite
Who painted it all white to welcome right

I search for the bees that brought the white pollen
To cover the flower of an Earth well swollen
If such bees do exist, let them know
I want to know the secret of the snow


The soft white of a baby’s palm
The hard work of the peasant in the farm
The cows milk for the calf with love so warm
All these vie in purity for your snow white charm

Rain is so imperfect
Its uncomfortably like sweat
You are a gentle rain
That does not need to drain
You cover the trees gently
You embrace the land completely
You are the heaven sent water
To quench our thirst with solid matter

Video recording of snowfall in NJ on March 18, 2018 by Sudhagar Shanmugasigamani.

© Ravishankar Palanivelu, April 10, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Monday, April 2, 2018

பள்ளிப்பருவம்


பள்ளிப்பருவத்தின் மேலேன்
கொள்ளை ஆசை?

பள்ளிப்பருவம்,
உருகாத பனி
அழுகாத கனி
அடங்காத அக்னி
காயாத மருதாணி
அதுபோல வருமாஇனி?

பள்ளிப்பருவம்,
ஓயாத அலை
குலையாத சிலை
பொங்காத உலை
உடையாத குவளை
ஈடு இணை
இதற்கு இல்லை!

பள்ளிப்பருவம்,
இறக்கும் வரைக்கும்
இருக்கும் இறுக்கம்
இறந்த பின்பே
ரிக்கும் ஞாபகம்

கரிசல் காட்டில்
கரிசன மழையால்
தரித்த பூவாய்,
பள்ளிப் பருவத்தை
நினைத்த போதெல்லாம்
தானாக தோன்றின
ஞாபக மலர்கள்

கடலை கூட
கடந்துப் போயினும்
கடந்தவை எங்களில்
மடியவே இல்லை,
கடைந்த வெண்ணையாய்
தடையின்றி தோன்றியது
தெளிந்த முத்தாய்
வெளியே வந்தது

பள்ளிப் பருவம்
துல்லியமாய் நின்றதும்
திரும்பிப் பார்த்தபோது
விரும்பியே விட்டதும்
எதனால்?
முதல் மழையால்
மட்டுமே வரும்
மண் வாசணை;
அதுப் போல
அநுபவங்கள் அனைத்திற்கும்
பிள்ளையார் சுழியிட்டது
பள்ளிப்பருவம் என்பதால்!

© Ravishankar Palanivelu, April 2, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Sunday, March 4, 2018

விளிம்பு; Translated version in English: On the Edge of Enlightenment










விடியல் ஓர் விளிம்பு,
அது
இரவின் அடக்கம்
பகலின் தொடக்கம்

பௌர்ணமி ஓர் விளிம்பு,
அதன்
வளர்ச்சியின் இறுதியில்
தேய்மானம் உறுதி

மேகம் ஓர் விளிம்பு,
அரும்பியது
வெந்திட்ட கடலுக்கும்
வந்துவிடும் மழைக்கிடையில்

அலை ஓர் விளிம்பு,
அது
மணற்கரைக்கு முன்பே
கடலில் நீர்க்கரை

நீர்க்குமிழி ஓர் விளிம்பு,
அங்கு
சிறையான காற்றுக்கு
விரைவில் விடுதலை

இசை ஓர் விளிம்பு,
அது
மௌனத்திற்கு பின்
வார்த்தைக்கு முன்

வாசல் ஓர் விளிம்பு,
அதன்
உள்ளே விலாசம்
வெளியே விசாலம்

நாணம் ஓர் விளிம்பு,
அங்கு
சபலத்தின் பெருக்கை
நாகரீகம் அணைக்கட்டும் 

துருதுருப்பு ஓர் விளிம்பு,
அமர்ந்திருக்கும்
அணலான அண்ணத்திற்கும்
அடங்காத பசிக்கிடையில்

அழுகை ஓர் விளிம்பு,
அத்தாட்சி
முயற்சி நின்றது
தோல்வி வென்றது

கண்ணீர், முத்தம், புன்னகை 
அனைத்துமே ஓர் விளிம்பு,
அவை
அளவில்லா உணர்வுகளின்
வார்த்தையில்லா பிள்ளையார்சுழிகள்

பாகுபாடு ஓர் விளிம்பு,
அதனால்
வெறுப்பு கரையேறியது
தீண்டாமையெனும் கறையானது 

தூது ஓர் விளிம்பு,
அது
போரை போக்க
அமைதி அமைய

தலைகுளியல் ஓர் விளிம்பு,
அங்கு
குழுமிய குழப்பம்
எழும் யோசனையாய்

மன்னிப்பு ஓர் விளிம்பு,
அப்பொழுது
தவறை ஏற்க
தற்கொலையாகும் தற்பெருமை

மரணம் ஓர் விளிம்பு,
அதனால்
நிகழ்வுகள் நிற்கும்
நினைவுகளில் மட்டும்

விளிம்பிலும் விளைச்சலுண்டு
விளம்பிட விழைகிறேன்:
மலையோ மடுவோ
கடலோ விண்வெளியோ
வாயடைய வைக்கும்
வாழ்க்கை தருணமோ
விளிம்புக்கு செல்லும்
எல்லா மனிதனுக்கும்
தானாய் தவறாமல்
ஞானம் வரும்.


English Translation by Kirubakaran Pakkirisamy

On the Edge of Enlightenment
------------------------------------------

Dawn is on the edge 
On the edge of 
Last night’s death
And this morn’s birth

The New Moon is on the edge
On the edge of
Its maximum waxing
And the start of it’s waning

The cloud is on the edge
One the edge of
The ocean boiling over
And coming down as shower

The waves are on the edge
One the edge of
The seas content
And the sandy beach’s extent

The beautiful bubble is on the edge
One the edge of
The glassy prison wall
And the air inside it all

The doorstep is on the step
One the edge of
The cozy indoors
And the vast outdoors

The coy smile of hers is on the edge
On the edge of
The uncontrollable desire
And the needed decent behavior

That cry is on the edge
On the edge of
Beaten effort
And the victory lost

That kiss or cry is on the edge
On the edge of
Uncontrollable emotions
And the beginning of new sensations

Discrimination is on the edge
On the edge of
Hate’s defeat
And slavery’s sealed fate

Diplomacy is on the edge
On the edge of
The war’s defeat
And Peace’s new date

The refreshing bath shower is on the edge
On the edge of
The dissolving last night’s confusion
And the new morning resolution
The apology is on the edge
On the edge of
Your ego’s suicide
For the wrongs that preceded


There’s light on the edge
Whether on the end of the mountain
Or the boundary of the ocean
Whether its a life’s challenge
Or death near the range
Whoever pushes themselves to the edge
There is light and enlightenment ...that’s life’s pledge


Image of the cliff shared from https://pixabay.com without violating copyrights rules as per CC0 Creative Commons usage guidelines (https://pixabay.com/en/service/terms/#usage).

© Ravishankar Palanivelu, March 4, 2018, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.