Monday, July 18, 2016

கண்ணீர்

உண்மை ஊமையான போது
உறவினர் ஊனிழந்த போது 
உறவு அறுந்த போது 
உள்ளம் உடைந்த போது  
உறவு பிறந்த போது    
உளமாற களிப்பேரிய போது
தாளாமலே தாங்காமலே  
தானே தோன்றும் ஊற்று 
தானே கண்ணீர்

ஆனாலும் உடல் 
வலிக்கும் போதும் 
வலிய வெளிவந்த 
துளியும் நீ தானே 

இடியுடன் கூடிய வானமாய்  
துன்பமிக்க வேளையிலும் 
ஆனந்தம் ததும்பும் போதும் 
வாயும் கண்களும் சேர்ந்தே 
வார்க்கும் மழையே கண்ணீர் 

இருப்பினும் இரண்டு வித்தியாசங்கள்... 
மகிழ்ச்சியின் போது வாய்க்கும் 
சோகத்தின் போது கண்களுக்கும் 
அதிக வேலை.. 
மகிழ்ச்சியின் போது அளவாகவும் 
சோகத்தின் போது வெள்ளமாகவும் 
வெளியேறும் கண்ணீர்..

சோகத்தை கரைத்ததால் 
கரித்தது கண்ணீரென்றால்  
ஆனந்த கண்ணீரோ 
தேனாய் ஏன் இனிக்கவில்லை?

எண்ணங்களை மொழிபெயர்க்க 
வார்த்தைகள் உண்டு 
சோகமான, சுகமான 
எண்ணப்பெருக்கை 
விரைவாய் விவரிக்க 
கண்ணீர் மட்டும் தான் உண்டு 

இறுகிய மனம் 
உருகியதால் 
பெருகிய வெள்ளம் தானோ 
கண்ணீர்?

இல்லை

இதயம் பொங்கிய போது 
எழுந்த சோக நீராவியெல்லாம்  
கண்களில் முட்டி 
பொழிந்த மழை தானோ கண்ணீர்? 

மனதில் தானே 
எண்ணங்களை பிழிந்தேன் 
கண்களில் எப்படி 
நீர் தாரை?

தேறிய கருத்தை 
அறிவு பேச 
வார்த்தையால் தெரிவிக்க
வாய் தான் தேவைப்படுகிறது
வதைக்கும் சோகத்தை 
இதயம் பேச 
கண்ணீராய் வெளியிட
கண்களை தான் தேர்வு செய்கிறது

இலை மறை காயாய் 
ஏமாற்றும் மாந்தரை 
இனம் கண்டு கொள்ள 
முதலிலேயே நம்ப வேண்டாம்
அவர் விடும் 
முதலை கண்ணீரை 

மடை திறந்த வெள்ளமாய் 
தடையின்றி வந்த கண்ணீரை 
துடைத்த விரல் 
தோழமையின் ஆதாரம்
ஆமை கண்ணீரை 
வீணாக்காமல் குடித்த பட்டாம்பூச்சியோ  
இயற்கை சுழற்சியின் 
அழகிய அத்தாட்சி 

மற்ற ஜீவராசிகள் கண்களை 
மசகிட மட்டுமே கண்ணீரை 
மெடக்கிடும் (ஆமை உட்பட)
மனித இனம் தானே 
மனதில் உள்ள சோகங்களை 
கழுவி தள்ளவும் 
கண்ணீரை பயன்படுத்துகிறது

Supporting information:
மசகிட = lubricate 

ஆமை கண்ணீரை வீணாக்காமல் குடித்த பட்டாம்பூச்சி = http://video.nationalgeographic.com/video/160303-butterflies-drink-turtle-tears


© Ravishankar Palanivelu, July 18, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Monday, July 4, 2016

கார்மேகம்; Translated version in English: Rain Clouds

Photo credit: Ravishankar Palanivelu




















விழையாமலே பொங்கிய 
மழலையின் அழுகையாய் 
அழையாமலே தழைத்தது  
மழை மேகம்

திரண்டது மேகம் 
மிரண்டேன் நான் 
பகலிலேயே ஓரிரவாயென 
சகலமும் கலங்கியது 

வதக்கிய பயத்தை 
ஒதுக்கி வைத்தால் 
கார் மேகத்திலும் 
ஓர் ஆயிரமழகை  
பார்க்க இயலும்  

அடர்ந்த காடொன்று 
இடம்பெயர்ந்து வானில் 
படர்ந்து பாம்பாய் 
படம் எடுத்த்தது 

நீலவண்ணன் திருடியதால் 
பால்வெண்ணை மறைந்தது 
கடையாமலே திரண்டஇந்த  
கருப்பு வெண்ணை
நீலவானத்தையே மறைத்தது

வாரணத்தின் தோலிலுள்ள 
வர்ணத்தை எடுத்து 
விரைந்து நிமிடத்தில்
வரைந்த ஓவியமென்பதாலா
கலைத்த கோலமாய் 
நிலை குலைந்துள்ளது  

நீ தரப்போகும் 
நீர் தாரையென்ன.... 

பதறி ஓடியதால் 
சிதறிய வேர்வையா?

கரிய கூந்தலை 
விரித்து துவட்டியதால் 
தெறித்த துளிகளா?

நனைந்த பஞ்சுமேகங்களை  
பிணைந்து பின்னி    
பிழிந்த போது 
வழிந்த நீரா?

வறட்சிக்கு துணைபோன  
சூரியனை எதிர்த்து 
கருப்புக்கொடி காட்டி 
கிளர்ச்சி புரியும்  
புரட்சிமேகங்களின் கண்ணீரா?

இடியெனும் மேளத்தோடு 
மின்னலெனும் வாணவேடிக்கையோடு 
விண்ணலே நடந்த 
திருமணத்திற்கு வந்தோரை 
வரவேற்க தெளித்த 
பன்னீர் துளிகளா? 
  
கருப்பு ஓவியத்திற்கு 
உருக்கொடுக்க 
வர்ணம் அள்ளியப்பின்  
தெளித்ததால் வெளிவந்த 
தூரிகை தூரலா? 
வண்ணமின்றி அவைகளையும் 
வடிகட்டி அனுப்பியதுயார்?

என்ன நீராயினும் 
உன்னை முழுதாய் 
உணர நாங்கள் 
பொறுத்து கொள்ளவேணும் 
புரிந்து கொள்ளவேணும் 

நீ தரும் 
நீர் இல்லையேல் 
ஓர் உயிரினமும் 
உயிர் வாழாதே 
வேறு எதுவும் 
வேர் விடாதே

ஆழியில் சேர்ந்த 
மழை நீரெல்லாம் 
பாழாகாமல் மீண்டும் 
பூலோகம் திரும்ப 
காலகாலாமாய் நீதானே 
இயற்கை வடிகட்டியின் 
இன்றியமையாத பாகம்

தோற்றம் அச்சுறுத்தினாலும் 
ஆற்றும் பணி 
போற்ற கூடியதே 
சீற்றத்தின் கொடூரம் 
மாற்றத்தின் ஆதாரம்

English Translation by Kiru Pakkirisamy

Rain Clouds
-----------------
Like the unforced tears of a child
The innocent rain pours down wild

Like it was a nightfall during the day
The dark clouds set me trembling away

Like the relief after an abated fear
A patient eye sees beauty in the rain cloud later

Like the cobra prefers the dark jungle
The rain clouds take to the sky to mingle

The Blue Lord apparently stole the white butter
This unchurned black butter hid the blue sky better

Is this a rushed attempt to paint with the rainbow colors?
An anxious attempt at painting has lost all artistic favors

Were you afraid of the flood when you open up and burst?
Rushing, sweating and your perspiration quenches all thirst

Were you shaking off the wetness off your dark hair?
It is coming down as bright little rain drops here

Were you trying to dry the drenched white cloud?
Squeezing them, twisting them, it is all raining below good

Was the sun plotting a famine in vain?
And clouds protesting shed tears as rain

Drum beating thunder and lightning fireworks going astray
For whose marriage in heaven are these fragrant rain spray?
 
The skies are dark,
Did somebody try to spray rainbow colors on to it?
But why does it fall down as with those colors filtered out?

You might be mere drops of water
We need to know and understand you better
Without you, brother
No animal lives or no plant takes root ever

All that evaporated
Came back
Thanks for keeping the earth protected

Dark clouds are menacing
But your service pleasing
There’s reason for extreme
As you cause a change so supreme

© Ravishankar Palanivelu, July 4, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Wednesday, June 29, 2016

சூரிய அஸ்தமனம்; Translated version in English: Deceiving Damsel

(Photo by Sadhana Ravishankar, on I-10, Palm Springs, CA, USA)
















களைத்துப்போய் மலை உச்சியில் 
இளைப்பாறும் ஒற்றை பயணி  

நாள் முழுக்க நடந்தாய் 
நாழிகை ஒன்றில் மடிந்தாய் 

விண்வெளிகளோடு நீ ஆடும் 
கண்ணாமூச்சி ஆட்டத்தின் ஆரம்பமிது 

நீராடுவதற்கு முன்னமே மஞ்சளை
பூராமுகமும் பூசியதேன் சூரியனே?

மலைத்துப் போனேன் எப்படி
மலையை முத்தமிட்டும் சிவக்காதிருந்தாய்?

வானுயர்ந்த மலை சிகரம்  
பானு இறங்கும் பாலமா

குன்றிலே மறைந்து எதிர்திசையிலே 
தோன்றும் நீ, மாயாவியா?

மலையுன்னை மறைப்பதால் ஓவ்வொரு  
மாலையிலும் ஒரு சூரியகிரகணம்

இது புரியாமல் நாங்களும் 
இரவென்று ஏமாந்து வருகிறோம் 

(பானு = synonym for sun)

----------------

Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.


Deceiving Damsel
-------------------------

You dont blush even while kissing the mountains
And rest your head on his shoulders hours later

You  go down in one direction and magically rise in the opposite
And you are angel who wears makeup before the ocean shower

You prance around the whole day and disappear promptly in the evening
And start your hide and seek with with the stars there after

You come down a high bridge daily
And thats the mountain peak you rest in the evening hour

You create a solar eclipse everyday hiding behind the mountains
And we believe that it is the night, you deceitful Sun Maid !!

© Ravishankar Palanivelu, June 29, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Tuesday, June 21, 2016

அகதிகள்

(In honor of World Refugee day, June 20, 2016)

இடம் பெயர்ந்த நாற்று
வேர் விட்டது, நாங்களோ
கண்ணீர் மட்டுமே விட்டோம்

இறைக்கு மட்டுமின்றி
இருக்கும் இடத்திற்கும் சேர்த்தே
பிச்சை கேட்டோம்

இழந்தோம்...
உறவுகள், நினைவுகள்
உரிமைகளை பறிகொடுத்த போதே
இறந்தோம்...
பல்லாயிரம் முறை
உயிருள்ள போதே
       
கைகளில் குழந்தையை சுமந்தோம்
மனதில் கடந்ததை சுமந்தோம்
கண்களில் முடிந்ததை சுமந்தோம்

பசித்துப்பார்
வயிறு மட்டும் சுருங்கும்
அகதியாகிப்பார்
வயிறும் இதயமும் சேர்ந்தே குறுகும்

அவமானத்தில் வெந்தே
சவமானோம்
காழ்ப்புணர்ச்சியால் வந்த கண்ணீரையும்
தாழ்ப்போட்டோம்

இயற்கை சீற்றத்தால் நாடு
இடம் பெயர்ந்தோர் குறைவு
செயற்கையாய் எய்திய போரால்
அகதியானோர் மிகவு

நீயாக விரும்பி சென்றால், நினைத்த போது
தாயகம் திரும்பி வரலாம்
வேறு வழியின்றி அகதியானால்
மறுபடியும் எப்பொழுது வீடு திரும்பலாம்?

சொந்த ஊரிலும், புதிதாய்
வந்த இடத்திலும்
எங்கள் வாழ்க்கையை நிர்ணயிப்பவர்
நாங்கள் இல்லை

எச்சம் போல்
துச்சமாய் புதிய இடத்தில்
சந்திப்போரெல்லாம்
சந்தேகிக்கின்றனர்

இடம் கேட்பது
மடத்தை பிடிக்க அல்ல
பிடரியை பிடிப்பவர்
இடறி விழுந்த நாங்களா?
ஒதுங்க தான் இடம் கேட்டோம்
பதுங்க அல்ல

இருக்க இடம் கொடுங்கள்
அதற்கு முதல் உங்கள்
இதயத்தில் கருணை
இறங்க இடம் கொடுங்கள்

வாய்ப்பு எனும்
தாய்ப்பால் கொடுக்கும்
அம்மாவாய் இருங்கள்
ஆரம்பத்தில் மட்டும்
ஆருயிர் செதுக்கும்
பிரம்மாவாய் இருங்கள்

வேண்டாமே பெரும்கோபம்
வேண்டாமே வெறும் சாபம்
வேண்டாமே பரிதாபம்
வேண்டுவதெல்லாம் மனிதாபிமானம்

© Ravishankar Palanivelu, June 21, 2016, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Sunday, June 12, 2016

ஞாபகம்

Photo by Sudhagar Shanmugasigamani















I. ஞாபகம் என்பது யாது?

கூட்டில் இருந்து வெளியேறிய நாள் முதல் 
கூடவே இருக்கிறாய்,
கூடிகொண்டே போகிறாய்

தாயையும் விட 
தந்தையும் விட 
தமக்கையையும் விட 
தமையனையும் விட
தாரத்தையும் விட 
நீ தான் என்னோடு எப்பொழுதும் 
தீபமாய் எரிந்து கொண்டு இருக்கிறாய் 

நீ என் 
நீங்கா நிழல் 
நிகரற்ற நிழல் 
உள் நிழல்..
வெளிச்சம் இருந்தும் நடுநிசியில் 
வெளியே வீழாத நிழல் போன்ற
உள் நிழல்..
ஒளியின்றினும் உள்ளேயே 
ஒளிந்துகொண்டிருக்கும்
உள் நிழல்

உன் 
நிரந்தரத்தை 
நிறம் பிரிக்க 
விழைகிறேன் 

சிறு வயதில் நிகழ்ந்த 
சின்ன சின்ன சம்பவங்கள் கூட 
சிதையாமல் என்னுள் 
சித்திரமாய் எப்படி இருக்கிறாய்?

ஒருமுறை மட்டுமே நுகர்ந்த வாசனையென்றாலும் 
உரு குலையாமல் பதிந்தது எப்படி?

உலுக்கிய முதல் இருட்டு இப்பவும் எப்படி 
குலுக்கி எடுக்கிறது?

சுவை, ஸ்பரிசம், உறவு, காட்சி
பகை, வெறுப்பு, யாசிப்பு, தேவை 
எல்லாவற்றையும் பயின்று உணர்த்துவது எப்படி?

அதனினும் மேலாய் 
தேவையான போது, நேரிட்ட போது
முகிலை விலக்கி வந்த சூரியனாய் 
அகிலம் சேர்ந்த மழையாய் 
சகிப்பில்லாத  அன்னையின் அன்பாய் 
கேட்காமலே தோன்றுவது எப்படி?

II. ஞாபகம் எங்கே உள்ளது?

நீ என்னுள்ளே எங்கு இருக்கிறாய்?
ஆராயோனும், எப்படி இருப்பாய்?
வடிவம் பார்க்கத்தான் 
பிடிவாதமாய் இருக்கிறேன்

மூளையின் எந்த மூலையில் முகாமிட்டு உள்ளாய்?
துளையை துளைத்த காற்று இசையாவது போலா?
உளையின் அருகில் உலாவும் வெப்பம் போலா?
நாளங்களின் வரப்பில் மின்சாரமாகவா?

தற்செயலாய் உன்னை சந்திக்க நேர்ந்தால் 
பிற்காலத்திலும் பார்க்க உன்னை சேமிப்பது எப்படி?

ஞாபகத்தை 
ஞாபகம் கொள்வது எப்படி?

III. நான் இல்லாமல் நீ 

நான் இறக்கும் போது நீ என்னவாய்?
அதற்கும் முன் உன்னை முழுதாய் 
இறக்கி வைக்க வேண்டும் 

யோசித்து பார்த்தேன் 
ஞாபகங்களை பதிவு செய்ய ஆரமித்த போது தான் 
மனித குலம் பிறந்தது 
நாகரீகமும் பிறந்தது 

நினைவு நாள், திருமண நாள், பிறந்த நாள் 
வாக்கியம், சொல், எழுத்து 
புத்தகம், கட்டுரை, கவிதை 
நாட்குறிப்பு, நாடொளி, காணொளி,
அனைத்துமே உன்னை இறக்கி வைக்கும் பணிதானே?
அனைத்து ஞாபகங்களையும் இறக்கி வைக்கும் 
வலிமை பெற்றால் மனிதன் நிரந்தரமாவான் 

IV. நீ இல்லாமல் நான் 

நான் இருக்கும் போது 
நீ இறந்தால் 
நான் என்னாவேன்?
உயிருள்ள பிணமாவேன்

காலைகடன் முதல் கண்ணுறங்கும் வரை 
வேலைகள் அனைத்திற்கும் நீயே மூலம் 
இல்லையேல் ஆவேன் நான் நிர்மூலம் 

ஊணுக்கு ஆணிவேர் அணுக்கள் 
அணுக்களின் ஆணிவேர் இரசாயணம் 
ஞாபகம் இவ்விரண்டின் மேல்பரிமானம்

ஞாபகம் இல்லையேல் வாழ்கை இல்லை 
ஞாபகம் இருக்கட்டும் 

© Ravishankar Palanivelu, November 8, 2015, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Tuesday, June 7, 2016

வானவில்; Translated version in English: Rainbow

(Photo by Ravishankar Palanivelu, while driving
on I-10 between Phoenix and Tucson)















வாவில் 

விரிந்த விந்தையை விவரிக்க வரியில்லை 
வில்லிங்கே, அம்பையோ ஏகலவனையோ காணவில்லை 

நங்கையின் வளைவுகளில் நயந்து நலிவது போல் 
இங்கேயும் வளைந்த அழகில் தானே சரிந்தேன் 


ஒரு சூரியன்ஏழு வண்ணம்ஆனால் தூரிகை எங்கே?
தருவாயா எனக்குஇரவில் எழுப்பி காட்டுகிறேன்

நீர்த்திரை போட்டு எதையோ மறைத்தது முட்டாள் மேகம் 
ஒளிக்கதிரோ துளியையும் துளைத்து உன்னை வெளியிட்டதே 

வண்ணபாலம் வர்ணஜாலம் அழகு தான் 
ஆனாலும் நிமிர்ந்து நின்று இருந்தால் மதித்திருப்பேன் 

இப்போழுது தானே பிறந்தாய், அதற்குள் 
எப்படி வீழ்ந்தது உனக்கு கூன்?

கூனிலிருந்து நிமிரிந்ததால் மனித ஜாதி கண்டது பரிணாமம் 
காலகாலமாய் வளைந்தே நீ மரித்ததால் எஞ்சியது பரிதாபம் 

நிமிடமாய் மறைந்து போக போகும் 
நிரந்தரமற்ற வானவில்லிலும் ஓர் சேதி உண்டு 

சூரியனேயே எதிர்த்து நின்றன நீர்துளிகூட்டம் 
சேர்வதால் வரும் பலனை பார்த்தாயா?

---------------------------------------------------------------------------------------------------------


Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy

Rainbow

Down the horizon I see a beautiful bow
The arrow is missing  and the archer is lying low

I have seen quite a buxom beauties in my youth
Never have I fallen for a curve so smooth

A sun, seven colors and a magic brush
Had I one such brush a rainbow at night shall flourish

A cloud so silly trying to hide you with just vapor
A light that pierces a million drops to reveal you proper

A beautiful bridge and a colorful dance for all  
Never bow your head to any lord for you stand tall 

A day old youth hunched like an old man
Its a mystery to resolve if one really can

Evolution made the man stand upright
You stoop so low and never got on the curve quite

You live for a momentary minute
But teach us all a lesson so sweet

Nobody dare challenge the mighty sun

But even a water drop can if they are together a million

© Ravishankar Palanivelu, June 16, 2015, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Monday, June 6, 2016

இது ஒரு பொன் மாலை பொழுது; Translated version in English: The Golden Evening Sky

Photo of Tucson evening sky by Ravishankar Palanivelu on 5/31/2015
















ஒளிரும் ஓவியத்தை தீட்டி விட்டு
ஒளிந்த ஓவியன் யார்?

வானின் ஒரு பகுதியில் மட்டும்
வண்ணக் கிருக்கலிட்ட குழந்தை யார்?

அறியா மொழியில் விண்ணப்பமிட்டு
தெரியாமல் பதுங்கியது யார்?

சுற்றும் முற்றும் துருவிப் பார்த்தேன்
ஒற்றன் போல் ஒட்டுக் கேட்டேன்
கற்றவன் போல் அலசிப் பார்த்தேன்
சற்றும் தகவல் கிடைக்கவில்லை

மீண்டும் ஒரு முறை அன்னாந்துப் பார்த்தேன்
தென்ப்பட்டது எல்லாம் விண்மீன்கள் மட்டுமே
திறன்டுகின்ற வெண்ணை போல் உணர்ந்தேன்
மிரண்டு மறைந்து பார்க்கும் உடையவரின் கண்களோ?

சத்தமில்லா மொழியில் மொத்தமாய் கேட்டேன்
வித்திட்ட விண்மீன்களே விடை என்ன?

எத்தனை முறை கரையை முட்டினாலும்
தப்பிக்க முடியாத அலையை போல்
சென்று விட்ட சூரியனிக்கு தினமும்
செய்தி சொல்லி ஏன் ஏமாறுகிறாய்?

தீட்டிய ஓவியக் காவியம்
சரிந்த விட்ட சூரியனுக்கா? இல்லை
வரப்போகும் நிலவுக்கா? இல்லை
வெளிவரவுள்ள வெள்ளிக்கா?

வண்ணம் தெரிகறது, எண்ணம் புரியவில்லை
பிழம்பாய் தோன்றினாலும் குழப்பம் தெரிகிறதே
நிதானம் கொள், நிரந்தரமின்மை தெளிவானது
விவாதம் வேண்டாம், விவரமாய் சொல்கிறேன் கேள்:

விரையும் வேகம் போலவே நீடித்த
இரயில் சினேகம்...

பருவத்தில் மட்டுமே ததும்பி வழிந்த
உருவ அழகு...

நாழிகை இரண்டுக்குகிடையில் அவசரமாய்
அவிழ்ந்த மொட்டு...

காற்றையே சிறை இட்டதாய் கர்வம் கொண்ட
நீர்க் குமிழி...

தேன் கொய்ய மட்டுமே பூவோடு கொண்ட
வண்டின் காதல்...

பெரும் முயற்சியால் வந்த வெற்றியானாலும்
ஒரு பொழுதே நீடிக்கும் மகிழ்ச்சி...

எப்பொழுதும் இருக்கும் பிரபஞ்சத்தில்
ஒரு பொழுதே நீடிக்கும் மனித வாழ்க்கை...

இவற்றின் நிரந்தரமின்மையிலும்
நிரந்தரமான உண்மை ஒன்று உண்டு

கலையப்போகும் உன் கோலம் போல்
புலப்பபட்டது இன்று.

------------------------------------------------------------

Translation of the above poem by my friend Kirubakaran Pakkirisamy.

Is that art so bright on the sky
A sleight of hand of a person so shy ?

Is that doodle above the horizon
A child’s work for no reason ?

Is that petition on the firmament
From a person who disappeared in a moment ?

I searched
I spied
I analyzed
Alas, no answers

Looked up the sky again
All I saw was stars in reign
Looks like a blob of butter churned
Or is it somebody wide eye and amazed

Posed a silent question to the responsible stars
What is the secret behind the evening light wars ?
 
Like the waves pushing against the shores in vain
Why do you send a plea to the sun again and again ?

Is that art an epitaph for the sun ?
No, is it a welcome poetry to the moon ?
Or is it a greeting for the Venus appearing soon ?

I  see the colors
Not the thought showers
It is bright
But do not understand it right
Stay calm, Nothing is permanent
Listen, no argument

Like the quickly made friendship on the train that ends with the journey

Like the beauty, that only in the youth glows

Like a bud that blossoms in a minute and falls

Like the arrogance of the bubble to have imprisoned the air that bursts

Like the short term love of the bee for the flower as the nectar ends

Like a moment of a ecstasy for the long hard work that never lasts

In this Universe so lasting and ever present
The human life is so evanescent

Like the twilight beauty, nothing lasts
That is the only truth that lasts

The golden evening sky - is a fleeting instance
But a lesson well learnt in an instant


© Ravishankar Palanivelu, 5/31/2015. Tucson, USA (ravipalanivelu@gmail.com)