Monday, December 18, 2017

பிச்சை



கல்லறைக்கும் எனக்கும்
இடையில் நின்ற
சிலவற்றில் இந்த
சில்லறையும் ஒன்று..
கைமாறும் காசுக்கு
என்ன
கைமாறு செய்யப்போகிறோம்?
சதையில் வந்து சேர்ந்தால்
சத்தம் வராது என
கையில் வாங்காமல்
பாத்திரத்தில் வாங்கி
வீழ்ந்த காசையும்
தாழ்மையான நன்றி
சொல்ல வைத்தோம்
மானம் இழந்து தான்
தானம் கேட்கிறோம்,
தந்த காசால்
உயிர் போன பின்னும்
வயிர்மட்டும் வாழ்கின்றது
இல்லாமையால் வந்த
இயலாமையைக் கண்டு
வேண்டுமானால்
இதயம் இருகி விடுங்கள்,
ஆனால்
இயலாமையால் வந்த
இல்லாமையை கண்டு
இதயம் இளகி விடுங்கள்.

© Ravishankar Palanivelu, December 17, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section. This was first posted in the FB group "Vaanga Pesalam" which solicited poems for the photo on the top. 

Wednesday, November 8, 2017

வெள்ளம்

 வெள்ளம் (Flood)

ஏரியெல்லாம் மலை
ஏறி விட்டதால்,
வாய்க்கால்களுக்கெல்லாம் நாம்
வாக்கரிசி போட்டுவிட்டதால்,
குட்டைகளுக்கெல்லாம் துட்டுக்காக
குட்பை சொல்லிவிட்டதால்,
பூமிக்கு வந்த மழையை
சேமிக்க தவறிணோம்,
ஓட்டைப்பாத்திரத்தால் பிச்சையை
கோட்டை விட்டதுப்போல்.

தானாய் வந்த
தாணத்தை போய்
வீனாக்கிய சாணக்கியர்களே!
இனி மேல்
வாரிவழங்க வரவில்லை
கார்த்திகை மாத
கார் மேகம்,
காரித்துப்பவே வருகிறது.

மாதம் தோறும்
மும்மாரி பெய்த
போது எல்லாம்
எப்போதோ வெள்ளம்,
இப்போதோ
ஓரிரு மழையிலேயே
ஊரேயே உள்வாங்கும்
சரளமான வெள்ளம்

வீதி வாய்க்காலானது
விதியின் கொடுமையல்ல,
மதியில்லாமல் தண்ணீர்
மிதக்க வேண்டிய
குளங்களிலும் ஏரியிலும்
குடியிருப்பு கட்டியதால்,
வடிவாய் வீடுகட்டிவிட்டு
வடிகாலை வடிக்காததால்

இத்தனை படித்தும்
அத்தனையும் வீண்
பூராத்தையும் புரிந்து
ஆராயாமல் அறியாமல்
தோராயமாக ஏன்
தெருக்களை கட்டினீர்கள்?
எஞ்சினியர்கள் இருந்தும்
எஞ்சியது என்ன?

இருக்க பிழைக்க
இடம் வேண்டும்
இல்லை எனவில்லை,
அதற்காக
இனாமாக கிட்டியதால்
முன்னோசனை இல்லாமல்
தான்தோன்றி தனமாக
கட்டுப்பாடு இல்லாமல்
கட்டிடம் கட்டிவிடுவதா?

அன்று பேராசையால்
மதமையில் மிதந்தோம்,
இன்று நிராயுதபாணியாய்
வெள்ளத்தில் மிதந்தோம்...

நகரம் அமைத்தவர்கள்
நகர மறுத்தால்
நரகமே நிச்சயம்,
குளத்து குடியிருப்பிலிருந்து
வெளியேற மறுத்தால்
வெள்ளமே சாத்தியம்

தீவான சென்னைக்கு
தீர்வு என்ன?

வருணனின் கருனை
தவறாமல் வேண்டும்
மழை தண்ணீர்
பிழைப்புக்கு வேண்டும்
பெய்த மழையை
கொய்துக் கொள்வோம்,
வாய்காலிட்டு வடிய
வாய்ப்பு கொடுப்போம்,
வடியம் தண்ணீர்
முடியும் இடம்
குட்டை, ஏரி
குளம் என்றாக்குவோம்
முக்கியமாய் இம்மூன்றும்
மழை நீரின்
குடியிருப்பு, நம்முடையதல்ல
என்பதை என்றும்
எண்ணத்தில் கொள்வோம்
© Ravishankar Palanivelu, November 9, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Tuesday, September 12, 2017

முதல் நண்பர்கள்

This summer, during my visit to India, I met friends from high school and college, after a very long time. It used to appear that the world revolves around these relationships and we too take them for granted. But reality strikes and we all move on. I recorded my thoughts after meeting these old friends in a Tamil poem here:

இடையில் நடந்தையெல்லாம்
கடைந்து எறிந்து,
பள்ளி பருவமெனும்
புள்ளியை தள்ளிவிட்டு,
கமுக்கமாய் வாக்கியத்தில்
கமாவைப் போட்டு,
பாக்கி வைத்த
வாக்கியம் தொடர
வியாப்பித்தேன்..

விட்டிலாய் உயிர்
விட்ட இடத்திலேயே
மறுபடியும் எழுந்திருக்க
முயற்ச்சித்தேன்..

பிரிந்த தருணத்தில்
பிறந்து மீண்டும்
சிறகை விரித்து 
பறக்காசைப்பட்டேன்..

உதிர்ந்த இலைக்கு
உதிரம் தந்து
பசையிட்டு ஒட்ட
ஆசைப்பட்டேன்..

விரிந்த மலரை
சுருக்கி மொட்டுக்குள்ளே
ஒப்படைக்க வேண்டி
நப்பாசைக்கொண்டேன்..

விழுந்த துளியை
தந்த மேகத்திற்கே
திருப்பி அனுப்ப
விருப்பப்பட்டேன்..

வேண்டிய சிநேகிதர்களை
மீண்டும் சந்திக்கும்
தருணம் இப்பொழுதே
வரணும் என்று
முளைத்த சிறகை 
முடக்க முடியாமல்
தவித்தேன்..ஆனால்,
காத்திருந்த நாட்களின்
மொத்த எண்ணிக்கைக்கு
ஈடான நிமடங்களுக்கு
கூட கூடமுடியாமல்
வாடினேன்.

அன்று போலவே 
இன்றும் இருப்பார்கள்
என்று வந்தயெனக்கு
நன்றாக புரிந்தது,
மாறி மெருகேறிய
தேறிய முதிர்ச்சி
தேக்கத்தில் தேங்கியதே!
சிந்தனையில் வளர்ச்சி 
வந்ததை காட்டும்
அத்தாட்ச்சிகள் ஓங்கியதே!

எதிர்ப்பார்ப்புகளை மட்டுமே
எதிர்கொண்ட நாம்
ஆசையாய் நிகழ்வுகளை 
அசைப் போட்டோமே,
சந்ததிகளுக்கு நம்
சங்கதிகளை எல்லாம்
புரியாத போதும்
பரிவுடன் சுட்டிக்காட்டினோமே!

இருந்ததெல்லாம்
இறந்த காலமென்மதும்
நடந்ததெல்லாம்
கடந்தவையென்பதும்
உணர்ந்த போது
உறைந்தேன், உலர்ந்தேன்

இரயில் சினேகமா
நம் பள்ளிப்பருவம்?
நம்ப முடியவில்லையே!
கணளவே நீடித்து
காணாமலே போகும்
வாணவில்லென்று இது
தோணவில்லையே!
ஆட்டம் முடிந்ததும்
ஓட்டம் எடுக்கும் 
கூட்டமா நாம்?
கட்டாயம் அந்த
கருத்தில் எனக்கு
உடன்பாடில்லை..

இருப்பினும் நாம் 
இறப்பில்லா உண்மையை
ஏற்கத்தான் வேண்டும்..
ஆரம்பக்கால பருவம்
திரும்ப வராது,
தொடக்ககால நகழ்வுகள்
தொடர முடியாது,
பிள்ளையார் சுழிப்போட்ட
பள்ளிப் பருவம்
உற்சவ மூர்த்தியல்ல,
மீண்டும் மீண்டும்
தேரில் ஏறி
நேரில் வந்து
வலமிட

பள்ளிப் பருவ
காலம் மட்டுமே
காலமானது, நட்புகளல்ல;
முடிந்தவரை நாம்
தெரிந்தவரின் நட்பை
புதுப்பித்துக் கொள்ளவும் 
பாதுகாத்துக் கொள்ளவும்
கத்துக்கொள்ள வேண்டும்.

© Ravishankar Palanivelu, Sep. 12, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

அநீதி

அறிவியல் அறிவை
அறவே பெற்ற
அரிய நங்கை
அரியலூர் அனிதாவை
அறியாதார் உண்டா?

ஸ்டெத்தஸ்கோப் போட
வேண்டிய கழுத்தில்
தூக்கு கையிறா?

நீட்டால் வாழ்வும்
நீடிக்கவில்லை, பாய்ந்த
ஈட்டியாய் கொன்று 
வாட்டியதும் நியாயமில்லை

எத்தனையோ உயிர்களை
காப்பாற்றியிருப்பாய், வாதமில்லை
உன் ஓருயிரை
காப்பாற்றதான் நாதியில்லை

வாய் மூடியேன்
குரல் கொடுக்கவேண்டும்?
வாக்கரிசி போட்டா
வாக்குவாதம் பண்ணவேண்டும்?

நியாயம் கேட்க
மறியல் பண்ணலாம்
மன்றாடியும் பார்க்கலாம்
மண்ணுக்குள்ளா போகனும்?

இத்தனை பேரை
தட்டியெழுப்பிய நீ
தூங்கி விட்டதைதான்
தாங்க முடியவில்லை

இயலாமையால் இல்லை
பயிலாதவளும் நீயில்லை
நீதியே இல்லலையென்பதால்
கொள்கையே இன்று
கொல்லவும் துணிந்தது

தேர்வால் இனி 
தீர்வில்லையென்பது தெரிகிறது 
கல்வி நிர்வாகத்தின்
எல்லா பொறுப்பும் 
மாநிலடமே வருவதை
காணிடும் நாள்
இனிதான் வரும்
அனிதாவால் என்று
மனதை திடமாக்குவோம்.

© Ravishankar Palanivelu, Sep 2, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

Sunday, June 25, 2017

நட்சத்திரங்கள்; Translated version in English: Stars


மலராத வெள்ளை மொட்டுக்கள்
உலராத வியர்வை துளிகள்
ஓயாத கண் சிமிட்டல்கள்
காயாத பனி துளிகள்

இரவில் விரைந்த
கரிய நங்கை
இடறிய போது
தெறித்து சிதறிய
தெள்ளிய முத்துக்கள்

அகன்ற வானத்தில்
அகலாத
அகல் விளக்குகள்
அல்லவா நீங்கள்?
இரவில்
தினந்தோறும் தீபாவளி என்பதற்கு
ஆதாரமன்றோ நீங்கள்?

கரிய வயலில்
அரிய விதைகளை
தெரியும்படி பயிரிட்ட
அறிவாளி யார்?

கோலத்தை
காலத்தே முடிக்காமல்
அலங்கோலமாய்
புள்ளி போட்டு விட்டு
தள்ளி போய் நின்ற
கள்ளி யார்?

மண்ணில்
விடிந்த பின்
வடிவாய் கோலமிடுவது
வழக்கம்..
விண்ணிலோ
அன்றாடம்
அந்தி
வந்த பின்னரே கோலமிடும்
விந்தை என்ன?

இரவில் தேடுவதாலா
இத்தனை கண்கள்?
கனவுகளுக்கு வழிகாட்டவா
கனிசமான மின்விளக்குகள்?

இத்தனை கண்களிருந்தும்
வாய் ஒன்று இல்லையே!
சத்தமில்லா வானம்
சாத்தியமானது எப்படி?
மயான அமைதியின்
மாயம் தான் என்ன?

திறந்த வெளியில்
திரிந்து வந்த
சூரியனை மறைக்கும் இரவின்
சூசகம் என்ன?
கறுப்பு போர்வை
இறுக்கமாய் இருக்க இரவு
பொறுத்திய பொத்தான்களில்
இருக்கிறதோ பதில்?

இன்றைய கொழுந்து
நாளைய சாம்பல்
என்று எரிப்பு
மேலும் ஒரு சலிப்பு
ஆனால் நீங்களோ
முன்பு எரிந்தீர்கள்
இன்று தெரிந்தீர்கள்

தூரத்து அழகு
கண்ணுக்கு பச்சை
பழமொழியின்
பொருள் என்ன-
கிட்ட வந்தால்
குட்டு வெளியாகும்;
அது போல்,
தொலைவால் தானே
தோன்றினீர்கள் நட்சத்திரங்களாய்?
உங்களில் யாரெல்லாம்
திங்களைப் போல்
பிரதிபலித்தீர்கள், எரியாமல்?


English translation by Kirubakaran Pakkirisamy

Stars

Little white buds yet to blossom
Still wet sweat beads looking winsome
Untiring eyes twinkling forever
These dew drops never dry for sure
 
When the dark maiden of the night tripped
These probably were the beads of pearl that spilled
 
An unfailing Festival of Lights every night
A proof that these were the lamps made it quite bright
 
Bright grains growing on a dark field
Whose idea was it to plant these rare seeds indeed  ?
 
Who played mischief with that mural on the sky
Started a masterpiece, left it half-way feeling shy ?
 
Its a custom to decorate the house in the morning
Whereas in the sky it is all festooned in the evening
 
Does the sky need so many eyes to search in the darkness ?
Or is it to guide the dreams that so many lights are in harness ?
 
When there are very many eyes
Why is it there is no mouth to utter words nice
How is it that a silent sky is possible
A silence of a graveyard that is perceptible
 
Is there a mystery behind the itinerant sun in the dark night
Or a plot to cover it with darkness buttoned down with star light
 
It's the norm what burns today becomes ash tomorrow
Where as you burned yesterday but today we see your glow

Golden and beautiful from a distance
At close inspection some differ in brilliance
The near by moon may have a beautiful countenance
Without the fire, against real stars planets don't stand a chance

© Ravishankar Palanivelu, June 23, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Tuesday, April 11, 2017

முறுவல்

சோம்பல் முறித்து
வெம்பிய சிரிப்பு
முறுவல்..
வளராத புன்னகையின் 
இளகிய இளவல்
முறுவல்..

சிரிப்பு செய்யுளென்றால்
புன்னகை புதுக்கவிதையென்றால்
முறுவல் ஹைக்கு தானே?

சிரிப்பின் விடியல்..
குறும்பின் வடியல்..
தயக்கத்ததின் தடயம்..
ஆமோதிப்பின் ஆதாம்..
ஆஹா,
சூழல் பலதில்
எழும் முதல்
மொழி முறுவல் தான்.

நிச்சயமாய்
நிகழ வேண்டும் என
நினைத்த போதெல்லாம்,
ஆசை கற்பனைகள்
ஆர்பரித்த போதெல்லாம்,
முதலில் 
முளைத்த வெள்ளி
முறுவல் தான்.

கால்நடையாய்
கடந்த காலத்தில்
கிடந்து,
ஆசையாய் ஞாபகங்களை
அசைப் போட்ட போது,
ஒசையின்றி ஒதுங்கிய
வாய் நுரை முறுவல்..
கடந்தவைகளை திரட்டி
கடைந்த போது
வெளியே வந்த
வெள்ளை வெண்ணை முறுவல்..

சொல்லி தராமலேயே
துல்லியமாய் எப்படி
கற்றுக்கொண்டோம்
முறுவலிக்க?

அரிதான ஆற்றல்
குழந்தையின்
முறுவலுக்கு உண்டு
அறிவாயா?
பூத்த முறுவலை
நேரில் பார்த்து
எதிர் முறுவல் 
உதிர்க்காதோர் 
உண்டோ?

பற்களையே
சொற்கள் ஆக்கிய
சிறப்பு புன்னகைக்குண்டு;
ஆனால், 
வாயை மட்டும் கொண்டே
வாக்கியம் பேசிய
முறுவலின்
விந்தையை எண்ணி நான்
வியந்தது உண்டு

அழுவதற்கு
கண்ணும் வாயும்
வேண்டும்,
முறுவலிக்கவோ வாயின்றி
வேறொன்றும் வேண்டாமே..

முறுவல் 
உன்
அமைதியின் அடையாளம்,
உன் நன்மைகளை
பறைசாற்றும் பணியாளி;
அதனால்
அடுத்த சந்திப்பில் 
எடுத்த உடனே
முறுவலித்துப் பார்,
எதிர்கொண்டோரோடு
நல்லதே தோன்ற
நல்லதோர் வாய்ப்புண்டு.

© Ravishankar Palanivelu, April 11, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Thursday, March 16, 2017

கனவு...கற்பனை...

கண் சரித்து யாசித்தால்
கனவு..
கண் விரித்து யோசித்தால்
கற்பனை..
இவை இரண்டிலுமே
இமைகள் இரண்டும்
அசைக்காத இறகுகளாய்
அமைதியாகவே இருப்பதெப்படி?

கனவு..
அடையாத ஆசையின்
கடைசி காட்சி,
கற்பனை..
சாதனை பயணத்தில்
முதல் முயற்சி

கனவு..
கண்கள் கதவு 
மூடியதும் தானே
மூண்ட கண்காட்சி,
கற்பனை..
கண்கள் கதவு
திறந்ததும் சிறகின்றி
பறந்த பட்சி.

கனவு..
கறுப்பு வெள்ளையில்
உருப்பெற்ற ஓவியம்,
ஒலியின்றி
ஒளிரும் ஒளிச்சித்திரம்
கற்பனை..
உள்ளக்கரை ஏறியும்
உலராத நினைவலை,
நெடுகி நீளும்
அடியேயில்லா அண்டம்

காசா பணமா
மோசம் போகப் போகிறது?
ஒசையின்றி இரண்டையும்
ஓசியல் செய்திடலாமே!
ஆதலால்,
கண்டிப்பாய்
கண்டிடு கனவை,
செம்மையாக
செய்திடு கற்பனையை

கனவு காண
கணப்பொழுதும் தயங்காதே,
தீராத ஆசை
பூராவும் அப்பொழுது தானே
பூர்த்தியாகிறது

கற்பனையை நிஜமாக்க
கற்றுக்கொள்,
முடியாதவற்றிர்கெல்லாம் உன்
முன் நிஜமாக
முகவரி  கிடைக்கும்,
பின்னர்,
கனவு காணும் 
அவசியமே இல்லாத 
அதிசயம் அரங்கேறும்.

© Ravishankar Palanivelu, March 16, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.

Sunday, January 22, 2017

விடியல்; Translated version in English: A Dawn

விடியல்
இடறிய இருளின் கையிலிருந்து 
சிதறிய வரவேற்பு சந்தனம் 

விடியல்
நாழிகை ஒன்று மட்டும் 
வாழ்ந்த கலங்கரை விளக்கம்

விடியல்
ஒல்லியாயினும் விரைவாய் வளரவிருக்கும் 
ஒளிப் பொடியன் 

விடியலென்ன, வானக் குடத்தின்  
விளிம்பில் இடித்து தளும்பி 
வெளியான வெளிச்ச சிதறலா? 
இல்லை 
உலகின் மறுபக்கத்திய அந்தியிலிருந்து  
புலர்ந்த பிரமிப்பான பிரதிபலிப்பா?

விடியல்...
சத்தமின்றி வானம் சூரியனை 
பெத்து எடுக்கும் பொழுது  
நித்தம் சிந்தும் இரத்தம்

யார் அங்கே புரளுவது?
சோர்வாய் எழுந்து, சோம்பல் 
முறித்த கண்களில் இப்படியாஒரு 
அறிவுக்கு எட்டாத அருஞ்சிவப்பு?

விடியல் ஏதோ வானத்தின் 
விளிம்பில் மட்டுமே ஒளிந்த
ஒளியென ஏமாற வேண்டாம் 
இடத்தை கொடுத்தவுடன் மொத்த  
மடத்தையும் பிடிக்கும் மாயாவியது 

காரிருள் போக்கும் மெழுகுவர்த்தியை 
யார் ஏற்றியது காலையில்? 
எரியும் சுடரோ கிழக்கில், 
அறிவாயா சில தருனத்தில் 
ஒழுகாமலே உருகாமலே மறைந்திடும் 
முழுவானமும் ஒளியால் நிறைந்திடும் 

என் விழிகளை மூடினாலும் 
எண்ணற்ற, இறைந்த, ஒற்றை 
கண்களை திறந்து நான் 
கண்டுகொண்டிருந்த கனவுகளை கலைத்ததேன்?

விடியல் போது மீதமிருந்த 
விண்மீன்கள் மீதொரு கேள்வி  
ஆதவன் எனும் பிரியமான 
காதலனை எதிர் பார்த்த
சிறுக்கி, நோக்கி வீசிய
நறுக்கிய நகங்களா நீங்கள்?
அத்தனை விடியல் அழகையும் 
பாத்தே தீரனும் என 
ஒத்த காலில் நின்று 
இத்தனை காலமாய் தவமிருந்து 
காத்திருந்தும், வந்தவுடன் ஏன் 
மொத்த கண்களும் மூடின?

கீழை வானில் மட்டுமே 
நுழை வாயில், ஆயினும் 
அழையாமலே நுழைந்த சூரியனோடு 
வழக்காட யாரும் விழையவில்லை,
வழக்கம் போல் விடிந்துவிட்டது

ஆனால் எண்ணற்ற ஏழைக்கு
இன்னல் இருட்டில் இருந்து 
இன்னும் விடியலே இல்லை

மனம் தளராதே மனிதனே 
தினம் விடியலில் பாடமுண்டு
கும்மிஇருட்டாயினும், ஒளி வருமென்ற 
நம்பிக்கை மாயினும், தளராதே! 
இந்த இரவு நிரந்தரமில்லை, 
வந்தே தீரும் புதுப்பகல்; 
அப்பிடியும் தோல்வியா? வருந்தாதே,
எப்படியும் இன்னொரு விடியலுண்டு.

-----------

English translation by Kirubakaran Pakkirisamy

A Dawn

Dawn, is it -
A dollop of cream that dropped from the ladle of darkness
Dawn, is it  -
An evanescent lighthouse that lasts till the noon
Dawn , is it-
The early childhood of the  daylight giant
Dawn - is it ? -
The water of light that splashed when the pot of darkness hit the sky
Dawn - is it ?
The brilliant reflection of a evening of the other half of this world
Dawn -
Did Mother sky bleed while delivering the Sun child ?
Dawn - is it ?
The beautiful eye color of  the Morning Lady even before she is out of her sheets
Dawn - is it ?
A shy conqueror of darkness who will take over the whole day
Dawn -
Who lighted the candle in the East ?
It seems to disappear without any trace of melted wax
Lighting up the whole sky before dying out
Dawn -
A real feast for the eyes after the unreal dream spectacle for the mental eye
Dawn -
A colorful dream even while waking up
Dawn
The few stars still visible  - are they the jewelry she threw in frustration waiting for the Sun lover ?
Why do those stars close their eyes after waiting anxiously for Dawn to uncover
Dawn
The dashing Sun gate crashes a party in the East
Nobody to contest and it is almost Dawn to again feast

Still, for the countless poor there is no dawn
Dont lose hope every morning teaches us a lesson
Never lose hope, darkness will end in light
And there will be a dawn after every night
Life is still not bright ?
Wait, there will be daylight after this night, quite right.

© Ravishankar Palanivelu, January 22, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com); please leave your feedback in the comments section.