Tuesday, September 12, 2017

அநீதி

அறிவியல் அறிவை
அறவே பெற்ற
அரிய நங்கை
அரியலூர் அனிதாவை
அறியாதார் உண்டா?

ஸ்டெத்தஸ்கோப் போட
வேண்டிய கழுத்தில்
தூக்கு கையிறா?

நீட்டால் வாழ்வும்
நீடிக்கவில்லை, பாய்ந்த
ஈட்டியாய் கொன்று 
வாட்டியதும் நியாயமில்லை

எத்தனையோ உயிர்களை
காப்பாற்றியிருப்பாய், வாதமில்லை
உன் ஓருயிரை
காப்பாற்றதான் நாதியில்லை

வாய் மூடியேன்
குரல் கொடுக்கவேண்டும்?
வாக்கரிசி போட்டா
வாக்குவாதம் பண்ணவேண்டும்?

நியாயம் கேட்க
மறியல் பண்ணலாம்
மன்றாடியும் பார்க்கலாம்
மண்ணுக்குள்ளா போகனும்?

இத்தனை பேரை
தட்டியெழுப்பிய நீ
தூங்கி விட்டதைதான்
தாங்க முடியவில்லை

இயலாமையால் இல்லை
பயிலாதவளும் நீயில்லை
நீதியே இல்லலையென்பதால்
கொள்கையே இன்று
கொல்லவும் துணிந்தது

தேர்வால் இனி 
தீர்வில்லையென்பது தெரிகிறது 
கல்வி நிர்வாகத்தின்
எல்லா பொறுப்பும் 
மாநிலடமே வருவதை
காணிடும் நாள்
இனிதான் வரும்
அனிதாவால் என்று
மனதை திடமாக்குவோம்.

© Ravishankar Palanivelu, Sep 2, 2017, Tucson, USA (ravipalanivelu@gmail.com)

No comments:

Post a Comment